மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு உச்சிமாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளநிலையில் தென்கரை ரவி குடும்பத்தார்கள் சார்பாக ஐம்பொன்னில் செய்யப்பட்ட ஸ்ரீவிநாயகர் முருகன் சிலையினை திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். விநாயகர் ,முருகன் ஐம்பொன் சிலைகள் சிறப்பு அலங்காரத்துடன் தென்கரை நான்கு ரத வீதிகளில் பவனி வந்து கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கரை ரவி குடும்பத்தார்கள் மற்றும் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கமிட்டி மற்றும் தென்கரை கிராமத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்கரை உச்சி மாகாளியம்மன் கோவிலில் விநாயகர், முருகன் ஐம்பொன் சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சி
எழுதியவர்: mohan February 5, 2026, 9:08 pm




You must be logged in to post a comment.