துண்டு பேப்பரில் வெடிகுண்டு மிரட்டல்.. பதறிய பயணிகள்! இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசர தரையிறக்கம்
எழுதியவர்: ஆசிரியர் January 30, 2026, 11:31 pm

குவைத் நகரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் இண்டிகோ விமானம், 2026 ஜனவரி 30-ஆம் தேதி காலை, விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து அகமதாபாத் விமான நிலையத்திற்கு மாற்றி தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் பதற்றத்தில் இருந்தனர். விமானம் தரையிறங்கிய பிறகு, பாதுகாப்பு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து, விமானத்தை சுற்றி பாதுகாப்பு வலயங்களை அமைத்தனர். பயணிகள் மற்றும் குழுவினரை பாதுகாப்பாக வெளியேற்றிய பிறகு, விமானத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய பொருட்களை சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விமானப் பயணிகள் மற்றும் விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.



You must be logged in to post a comment.