சாயல்குடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவர் சிறுமியர் உட்பட 10 பேர் படுகாயம்!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட கீழசெல்வனூரில் ராமேஸ்வரத்தில் கடலில் புனித நீராடி திதி கொடுத்துவிட்டு சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் கிராமத்திற்கு செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையோரம் பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த சிறுவர் சிறுமியர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கீழச்செல்வனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.




You must be logged in to post a comment.