17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சோழவந்தானில் அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan October 28, 2025, 10:26 am

சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் 224வது குருபூஜையையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஏற்பாட்டில் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமையில். மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி தென்கரை ராமலிங்கம் இளைஞர் அணி கேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா பேட்டை பாலா அப்பாச்சி கண்ணன் சரத் ஜெயபிரகாஷ் துரை கண்ணன் மன்னாடி மங்கலம் ராஜபாண்டி ராமு மகளிர் அணி சாந்தி மாரிமுத்து உமா மாரி குருவித்துறை வனிதா செல்வம் என்ற செல்லாத்தா கென்னடி எஸ் பி மணி பிரேம் பங்க் சசி முள்ளிப்பள்ளம் சேது மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!