17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவில் திமுக நகரம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவில் திமுக நகரம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan October 1, 2025, 10:49 am

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி நகர் தி மு க சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் தொழிலாளர்கள் உழைப்பாளர்கள் பெண்களுக்கான 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரையூர் சோலை குரு மஹாலில் நடைபெற்றது.

துரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தியின் ஆலோசனையின் படி 2000 சுடுகாட்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகர செயலாளர் எஸ். ஓ .ஆர். தங்கப்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் ஏற்பாட்டின் படி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் எம் . பி., உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் பி. செல்லத்துரை மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஜு. பி. ராஜா , இன்பா ஏ.என்.ரகு, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன், எம். பி. பழனி, அஜித் பாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் டி. முத்துராமன், சி. சுதாகரன் சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், சங்கரபாண்டியன், செல்வ பிரகாஷ், எழுமலை ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் நகர அவைத்தலைவர் சி.எம்.பி. சின்னன் வரவேற்றார். இவ்விழாவில் சுடுகாட்டு பணியாளர்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் வேட்டி, சட்டை, சேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி எம். ஆர். அருண் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி. விமல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை குபேந்திரன் விவசாய அணி பி.டி மோகன் இலக்கிய அணி கட்டளை பா. விஜய் மூத்த முன்னோடிகள் தங்கமலைபாண்டி, கல்யாணி, டி.சி. கணேசன், டீலக்ஸ் ராமர், வாலாந்தூர் பார்த்திபன், டி. துரை கோடாங்கி எஸ். பி ராஜா மணி மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் என். ஜெகன் முல்லை மூவேந்திரன், கே. பி. பிரபு, கலைவாணன், கே பி பிரவீன்நாத், சின்ன பாண்டியன், அலெக்ஸ் பாண்டியன், நகர் கழக நிர்வாகிகள் உதய பாஸ்கரன், தேவி ரமேஷ், அழகர், மகாலிங்கம், வீரா தினேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் எஸ் முருகன், கே எஸ் வீரமணி, நாகஜோதி பிரியா, காத்தம்மாள், சந்தானம் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆர் ராஜசேகர், கனிராஜன், சி.எம் விக்னேஷ், கே. ஆனந்த், சதீஸ் ராஜன் இளைஞர் அணி சுஜேந்திரன் மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள் முருகன், ரவி, தசஜோதி, செல்லப்பாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் உசிலம்பட்டி நகர நிர்வாகிகள், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேட்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் எழுமலை பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சுடுகாட்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கேஸ் அடுப்பு , சீருடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் நகரப் பொருளாளர் து. கா. ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!