18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் காமராஜரின் திருவுருவட்சிலைக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

சோழவந்தானில் காமராஜரின் திருவுருவட்சிலைக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan July 15, 2025, 4:00 pm

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ் வக்கீல் திருப்பதி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா திருவேடகம் மணி என்ற பெரியசாமி துரைக்கண்ணன் கிரில் மாரிஜேசிபி சுரேஷ் வைகை ராஜா ஒன்னாவது வார்டு முத்துக்குமார் பத்தாவது வார்டு மணி உள்பட பலர் கலந்து கொண்டனர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார் முன்னதாக சோழவந்தான் பேரூராட்சி பன்னிரண்டாவது வார்டு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!