இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது. இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது.
ஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் இல்லாத நிர்வாகம், சீர் இல்லாத நிர்வாகமாகவே மாறியுள்ளது.
மழை பெய்து மூன்று நாட்கள் ஆகியும் சாலைகளில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை சீராக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்கனவே மொத்த குத்தகைக்கு கீழக்கரையில் இருந்து வரும் வேலையில், நகராட்சியின் இது போன்ற அலட்சிய போக்கு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
உறங்கி கிடக்கும் நகராட்சி இப்பொழுதாவது விரித்துக் கொள்ளுமா??







You must be logged in to post a comment.