18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்பி உதயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்பி உதயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு

எழுதியவர்: mohan May 16, 2025, 2:31 pm

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சி புதூர் முப்பிலையான் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளார் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் மகேந்திரன் மாணிக்கம் கருப்பையா, ராஜேஷ் கண்ணா, துரை தன்ராஜ் மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மு.கா.மணிமாறன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் சிறப்பு வழிபாடு செய்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் வி.பி.மதுசூதனன், பொறியாளர் குரு பார்த்திபன், நிர்வாகிகள் விஸ்வநாதன், பெரிய கருப்பன், ஹரி, ஜேசிபி மணி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, அழகர், மணிகண்டன், பரந்தாமன், ஜெயக்குமார், மலைச்சாமி, மூர்த்தி வேலுச்சாமி வாவிடமருதூர் குமார் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன் கோட்டைமேடு பாலன் தென்கரை நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!