18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan April 26, 2025, 10:36 am

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
வருவாய்த்துறை அலுவலர் சங்கவட்டக்கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாசானம் தொடக்கி வைத்தார் ஆர்பாட்டத்தில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும்,காலி பணியிடங்களை நிரப்பும் கோரியும், பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான கோஷங்கள் எழுப்பினர். அனைத்து துறை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வட்ட கிளை செயலாளர் வேல்மயில் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் கென்னடி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!