18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

எழுதியவர்: mohan April 20, 2025, 10:38 am

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரௌபதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகின்ற மே 7ஆம் தேதி சோழவந்தான் மந்தைக்களத்தில் நடைபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!