தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறு பேசிய பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிமை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பா அலுவலகத்தில் முஸ்லிம் ஐக்கிய ஐமாத் மாவட்ட தலைவர் எம் எஸ் ஏ ஷாஜஹான், பொதுச்செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம், பொருளாளர் பக்ருல் அமீன், துணை தலைவர் டி.எம். அப்துல் முத்தலிபு, மாவட்ட செயலாளர்கள் ஐ. அஷரப் அலி, எம். முஹமது இலியாஸ் ஆகியோர் இன்று புகார் அளித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், பரமக்குடி பசீர் அஹமது உடனிருந்தனர்.
வேலூர் இப்ராஹிமை கைது செய்ய வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.
எழுதியவர்: mohan January 28, 2025, 4:41 pm




You must be logged in to post a comment.