இன்று(26/01/2025) பள்ளியில் 76 வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பொது மேலாளர் DR.ஜனாப். M. முஹைதீன் சலாவுதீன் கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த இரண்டாம் வகுப்பு மாணவி S.ஜெய்னப் மஸ்கூராவுக்குபரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக மாறு வேடப் போட்டி, பாட்டுப் போட்டி ,ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கீழக்கரை பள்ளியில் குடியரசு தின விழா
எழுதியவர்: mohan January 26, 2025, 1:09 pm




You must be logged in to post a comment.