மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையிலும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞர் கரும்மான முத்துக்குமார் அவர்கள் முன்னிலையிலும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காவல்துறை குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ஐஸ்டின்பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்ச்சியில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஸ்டார் குரு அவர்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, மேலும் இந்நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, தமிழ் சினிமா நடிகர் சங்கத்தின் உள்ள நடிகர், நடிகைகள் வினோத், நண்பர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்,
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் .!
எழுதியவர்: Baker BAker January 12, 2025, 11:49 am




You must be logged in to post a comment.