17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் April 4, 2018, 1:09 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணம் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் கடலோர ஒழுங்கு முறை மண்டலம் CRz 1 க்கு பதிலாக CR Z4 ஐ செயற்கை கோள் மூலமாக கடற்கரை பகுதிகளை படம் எடுத்து இப்போது நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் கடற்கரை கடற்கரையை சார்ந்த மீனவர்கள் மற்றும் சுற்று சூழலுக்கு பெரிதும் அழிவை ஏற்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இதனை கடற்கரை சார்ந்த மீனவரிடம் நேரிடையாக விசாரனை செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன் சங்க மாவட்ட தலைவர் பால்ச்சாமி தலைமையில் காசிலிங்கம் அன்னம்மாள் முன்னிலையில் செயலாளர் ஜோசப் உட்பட ஐந்நூறுக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!