17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.! போலீஸ் விசாரணை .!!

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.! போலீஸ் விசாரணை .!!

எழுதியவர்: Baker BAker January 2, 2025, 10:08 am

 தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (65). தொழிலதிபா் மற்றும் ஒப்பந்ததாரரான இவா் திருச்சி, பொன் நகா் 2ஆவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரத்தநாட்டில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற சண்முகம் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது வீட்டின் காவலாளி முருகேசனை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் அளித்த புகாரின்பேரில் திருச்சி நீதிமன்றக் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களைச் சேகரித்து விசாரிக்கின்றனா்.

முதல்கட்ட விசாரணையில் 20 பவுன் நகைகள், ரூ. 40 லட்சம் கொள்ளைபோனதாக சண்முகம் குடும்பத்தினா் தெரிவித்தாலும், கொள்ளை போனவற்றின் மதிப்பு முழுமையாகத் தெரியவில்லை. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனர்

திருச்சி செய்தியாளர் H.பஷீர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!