தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தெற்கு ரெயில்வே சார்பில் 34 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் மொத்தம் 302 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.இதேபோல, இந்திய ரெயில்வே துறை மூலம் இந்த ஆண்டு மொத்தம் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க ஏதுவாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 34 சிறப்பு ரெயில்கள்..
எழுதியவர்: Askar September 30, 2024, 8:27 am




You must be logged in to post a comment.