இராமநாதபுர மாவட்டம் உச்சிபுளி அருகிலுள்ள இரட்டையூரணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உழைப்பாளர் தினத்தை (மே 1) முன்னிட்டு “நாளைய சமுதாயம் விண்தொடும் விவசாயம்” என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களோடு இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியில் பாரம்பரிய விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு விவசாயத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை துணையெடு என்னும் கரகோசம் எழுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளான அபிநயா , ஐஸ்வர்யா, ஆனி ஹிங்கிஸ், ஆர்த்தி ஸ்ரீ, ஆஷிகா,தனுஷ்யா, திவ்யதர்ஷினி, எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் த.தமிழ்மாறன் ஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.
வேளாண் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்ட பள்ளி மாணாக்கர்களின் பேரணி !
எழுதியவர்: Baker BAker April 29, 2024, 6:49 am




You must be logged in to post a comment.