தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஆரணி- 73.77கரூர் – 74.05பெரம்பலூர்- 74.46சேலம்- 74.55சிதம்பரம்- 74.87விழுப்புரம்- 73.49ஈரோடு- 71.42அரக்கோணம்- 73.92திருவண்ணாமலை- 73.35விருதுநகர்- 72.99திண்டுக்கல்- 71.37கிருஷ்ணகிரி- 72.96வேலூர்- 73.04பொள்ளாச்சி- 72.22நாகப்பட்டினம்- 72.21தேனி- 71.74நீலகிரி- 71.07கடலூர்- 72.40தஞ்சாவூர்- 69.82மயிலாடுதுறை- 71.45சிவகங்கை- 71.05தென்காசி- 71.06ராமநாதபுரம்- 71.05கன்னியாகுமரி- 70.15திருப்பூர்- 72.02திருச்சி- 71.20தூத்துக்குடி- 70.93கோவை- 71.17காஞ்சிபுரம்- 72.99திருவள்ளூர்- 71.87திருநெல்வேலி- 70.46மதுரை- 68.98ஸ்ரீபெரும்புதூர்- 69.79சென்னை வடக்கு- 69.26சென்னை தெற்கு- 67.82சென்னை மத்தி- 67.35
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு! மாவட்ட வாரியாக எத்தனை சதவிகிதம்..!
எழுதியவர்: Askar April 19, 2024, 8:47 pm




You must be logged in to post a comment.