ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பழங்கொட்டை தெருவில் வசித்து வரும் சேக் தாவுது என்பவரது வீட்டில் இன்று அதிகாலையிலேயே தேசிய பாதுகாப்பு முகமை டிஎஸ்பி முருகன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சேக்தாவூது வீடு மட்டுமின்றி அருகில் உள்ள அவருடைய அப்பா வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது. இதனால் தேவிப்பட்டினம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
தேவிபட்டினத்தில் திடீரென நடந்த என்.ஐ.ஏ. சோதனை !
எழுதியவர்: Baker BAker March 27, 2024, 7:07 pm




You must be logged in to post a comment.