இன்று 27/1/2024 சங்கரா கண் மருத்துவமனையுடன் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம், கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் உள்ள மகான் சேகனாப்பா தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் தலைமையில், முன்னாள் தலைவர்.டாக்டர்.ராசிக்தீன் மற்றும் தலைவர். முனைவர் கபீர் ஆகியோர் முன்னிலையில், செயலாளர். எபன் பிரவீன்குமார், முன்னாள் செயலாளர். கார்த்திக்,RK பில்டர்ஸ் கண்ணன், ரோட்டரி சங்கம் உறுப்பினர்கள் மற்றும், ஊர் முக்கிய பிரமுகர் வாஹித் மற்றும் சாதிக் ஆகியோருடன் அல்நூர்-ஹஸன், மருத்துவ குழுவினரும் முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண்மருத்துவ சிகிச்சை முகாம்…
எழுதியவர்: ஆசிரியர் January 27, 2024, 11:20 pm




You must be logged in to post a comment.