17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » எல்லை தாண்டி மீன்பிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர் 6 பேர் கைது..

எல்லை தாண்டி மீன்பிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர் 6 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் January 23, 2024, 9:19 am

இராமநாதபுரம், ஜன 23 – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர் 6 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 480 விசைப்படகுகள் மீ பிடிக்க நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. நேற்று இரவு 8 மணி வரை இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இவர்கள், இலங்கை கடற்படை ரோந்து வந்து சென்ற பின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்பினர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகளை சுற்றி வளைக்க முயன்றபோது 2 படகுகளில் இருந்த 6 பேர் மட்டும் பிடிபட்டனர். 2 படகுகளில் 14 மீனவர்கள் டன் கணக்கிலான மீன்களுடன் தப்பிச் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. சிறை பிடித்த 2 படகுகள், 6 மீனவரை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இவர்களிடம் முதல்கட்ட விசாரணைக்கு பின். மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!