இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலாடி பொதுமக்கள் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையொட்டி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி கணினியியல் துறை தலைவர் காசிக்குமார் ஏற்பாடு செய்தார்.
கீழக்கரை சையது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு…
எழுதியவர்: ஆசிரியர் January 7, 2024, 9:49 am




You must be logged in to post a comment.