இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் மேலமடை கிராமத்தில் வசிக்கும் ராக்கச்சி கோடாங்கி மனைவி கிழவி (வயது 89) என்பவரின் மண்சுவரினால் ஆன குடிசை வீடு திடீரென்று எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்துள்ளது. சம்பவத்தை அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆறுதல் கூறி நிவாரணம் பொருள் வழங்கினர். இதில் துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலமடை கிராமத்தில் கீழக்கரை வட்டாட்சியர் ஆய்வு..
எழுதியவர்: ஆசிரியர் January 5, 2024, 8:51 pm




You must be logged in to post a comment.