18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நள்ளிரவில் லாரியின் முன்பு விழுந்த நபர் உயிரிழப்பு

மதுரையில் நள்ளிரவில் லாரியின் முன்பு விழுந்த நபர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan December 10, 2023, 10:55 am

மதுரை ரயில் நிலையம் 440 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை கடந்த மே மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையம் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை ரயில் நிலைய கட்டுமானப் பணிக்காக நள்ளிரவில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் முன் விழுந்து மர்ம நபரின் உடல் நசுங்கி இரண்டு பாகங்களாக சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து உயிரிழந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் குறித்த விவரங்கள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த நபர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!