17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் கும்பல், கும்பலாக நாய்கள் வலம் – பள்ளிக் குழந்தைகள், பெண்கள் வெளியில் நடமாட பீதி.

திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் கும்பல், கும்பலாக நாய்கள் வலம் – பள்ளிக் குழந்தைகள், பெண்கள் வெளியில் நடமாட பீதி.

எழுதியவர்: mohan December 6, 2023, 1:11 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளான PCM நகர், அசோக் நகர், சோணை மீனா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் நேரங்களிலும் கும்பல், கும்பலாக நாய்கள் சுற்றிவருவதால், பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் வெளியில் நடமாட பீதி அடைந்துள்ளனர். இதனால் PCM நகரைச் சேர்ந்த ராஜசுதா (32) என்ற பெண் நாய்களை துரத்த கல்லை எறிந்தார். ஆனால் நாய்க்கு சொந்தமானவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இருவரிடையே வாக்குவாதம் முற்றியதால், ராஜசுதா கல்லால் அடித்து தாக்கப்பட்டார். காயமுற்ற ராஜசுதா தலையில் பலத்த காயத்துடன் TM GH – ல் அனுமதி. நாய்களை அப்புறப்படுத்த TM நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!