கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் தோணிப் பாலம் அருகில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளார்கள்.
இளைஞர்கள் திருப்புல்லாணி வடக்குத்தெரு மற்றும் தெற்குத்தெருவைச் சார்ந்தவர்கள். காயம்பட்ட மூவரும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பலத்த காயத்துடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவ இடத்தில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தை சார்ந்த ஃபருக் மரைக்காயர் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.




You must be logged in to post a comment.