இராமநாதபுரம், நவ.14 – புதுடெல்லி தேசிய பாலபவனில் நவ. 17 முதல் 19 வரை தேசிய குழந்தைகள் தினவிழா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம் ஆசிரியர் தனசேகரன் தலைமையில் பங்கேற்கும் மாணவர்கள் தருண், வர்னேஷ், முனீஷ், சஷ்ஸ்ரீ ஆகியோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் வாழ்த்து பெற்றனர். வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் பகான் சுதாகர், சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட சமூக அலுவலர் தேன்மொழி, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் சிலம்பொலி மு.லோக சுப்ரமணியன் ஆகியோர் உடன் உள்ளனர்.
தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்க டில்லி சென்ற ராமநாதபுரம் சிறார்கள்..
எழுதியவர்: ஆசிரியர் November 14, 2023, 10:39 am




You must be logged in to post a comment.