17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரகசியமாய் நடைபெற்ற கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டவிழா.

ரகசியமாய் நடைபெற்ற கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டவிழா.

எழுதியவர்: mohan May 23, 2022, 3:51 pm

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொலி காட்சி மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு துக்கி வைத்தார்.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர்,நடுப்பட்டி, போத்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொலி காட்சி மூலம் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்., இதனை உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ பி.அய்யப்பன் விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், மருந்து தொளிப்பான் இயந்திரம், விவசாய இடு பொருட்கள் என 15 வகையான பொருட்களை விவசாய பயணாளிகளுக்கு வழங்கினர்.முதல்வர் கணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் திட்டம் என்றாலும் ஆளுங்கட்சி நிருபரைத் தவிர மற்ற நிருபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.இதனை இவ்வளவு ரகசியமாய் நடத்த வேண்டிய அவசியம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!