ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் 52 லாரி டிரைவர் இவர் கடந்த ஆறாம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் மூளைச்சாவு அடைந்தார் உறவினர்களின் ஒப்புதலுடன் அவரது உடல் தானமாக பெறப்பட்டதுவேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட இதயத்தை சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கும் நுரையீரல் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிறுநீரகம் ஒன்று சிஎம்சி மருத்துவமனைக்கும் மற்றொன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் கண்கள் இரண்டும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது
ரேணிகுண்டா டிரைவர் மூளைச்சாவு உடல் உறுப்புகள் வேலூரில் தானம்.
எழுதியவர்: mohan May 12, 2022, 9:43 am




You must be logged in to post a comment.