17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை காமராசர் பல்கலையில் பணிநிரந்தரம் வேண்டிய மாற்று திறனாளி ஊழியர் தீக்குளிக்க முயற்ச்சி.

மதுரை காமராசர் பல்கலையில் பணிநிரந்தரம் வேண்டிய மாற்று திறனாளி ஊழியர் தீக்குளிக்க முயற்ச்சி.

எழுதியவர்: mohan April 22, 2022, 7:24 am

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதிச்சுமையை காரணம் காட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த ஊழியர்களை (தொகுப்பூதிய, தற்காலிக பணியாளர்களை) 136 நபர்களை பணி நீக்கம் செய்தனர்.இதனை கண்டித்தும் தங்களது வாழ்வாதாரம் பறிபோனதை கடந்த எட்டு நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் இருந்து வரக்கூடிய நிலையில்136 ஊழியர்களும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரக்கூடியது குறிப்பிடத்தக்கதுபல்கலைக்கழக நிர்வாகத்திடம் தொடர்ந்து பல்வேறு முறைகளில் ஊழியர்கள் சார்பில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த முடிவும் எட்டவில்லை எட்டாத காரணத்தினால்மாற்றுத்திறனாளி ஊழியரானசெந்தில்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன்.நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்று திறனாளி ஊழியர் செந்தில்குமார் மேல் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!