காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி, திவ்யா, லூசியா மேரி, சுவாதி ஆகியோர் இன்று அய்யூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய தானிய தினத்தை முன்னிட்டு சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சரிவிகித உணவு, நெகிழி பொருட்களை தரம் பிரிக்கும் முறைகள் மற்றும் காடு வளர்ப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து உரைத்தனர்.
தேசிய தானிய தினத்தை முன்னிட்டு சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு.
எழுதியவர்: mohan March 8, 2022, 12:14 pm




You must be logged in to post a comment.