கீழக்கரை நகராட்சியின் சுகாதாரம்தை மேன்படுத்த போவதாக அறிவித்து, அதற்கான நவீன கம்பெக்டர் வாகனம் மற்றும் நவீன ?? குப்பைக் கொட்டும் தொட்டிகளும் பல லட்சம் ரூபாய் செலவில் வந்திறங்கி, நகராட்சி ஆணையரால் அத்திட்டம் தொடங்கியும் வைக்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் தொடங்கி சில தினங்களிலேயே மக்கள் பெரும் அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள், காரணம் முறையான பயிற்சி எடுக்காமல் கம்பெக்டர் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளுவதால், கழிவுகள் சாலைகளிலும் சிந்துகிறது. அதே போல் 4 சக்கரங்களுடன் வாங்கப்பட்ட குப்பை கொட்டும் தொட்டிகளில் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தொட்டிகளில் சக்கரங்களை காணவில்லை.
இத்திட்டம் மக்களின் சேவைக்காக கொண்டு வரப்பட்டதா அல்லது அதிகாரிகளின் தேவைக்காக கொண்டுவரப்பட்டதா என்பது புரியாத புதிராகவே உள்ளது.






You must be logged in to post a comment.