17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செட்டியார்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் தார்ச்சாலை.

செட்டியார்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் தார்ச்சாலை.

எழுதியவர்: mohan January 9, 2022, 11:32 am

இராஜபாளையம் தொகுதியில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் *கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்(2021-2022) கீழ் 157 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை வார்டு-11,12 நாயுடு தெற்கு தெரு மற்றும் வி.ஐ.பி நகரில் வாறுகாலுடன் கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணியை சென்னையிலுள்ள கண்காணிப்புப் பொறியாளர் திருமாவளன் சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் MLA பார்வையிட்டனர், இந்நிகழ்வில் , தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியில் செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் மற்றும் கிராமப்பகுதிகளில் விரைவில் 100% தார்ச்சாலை மற்றும் பேவர்பிளாக் தளம் மூலம் சாலை வசதி மேம்படுத்தப்படும் என MLA கூறினார்.இந்நிகழ்வில் நிர்வாக பொறியாளர் சாய்ராஜ் உதவி நிர்வாக பொறியாளர் சுரேஷ்குமார் செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!