கீழக்கரையில் இன்று (19-01-2018) “அமைதியை நோக்கி” – வாழ்வியல் கண்காட்சி ஹுசைனியா மஹாலில் சிறப்பாக தொடங்கியது. இக்கண்காட்சி இரண்டு நாட்களுக்கு 19 மற்றும். 20ம் தேதி நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று ஏராளமான இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் பல் வேறு அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் ஆர்வத்துடன் கண்காட்சியை கண்டு களித்தனர்.
மேலும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதே போல் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தை விளங்கும் வண்ணம் அழகிய வண்ணம் எளிய முறையில் விளக்கம் அளித்தனர்.
இந்த அரிய வாய்ப்பினை தவற விடாமல் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புகைப்படங்கள்









You must be logged in to post a comment.