வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக அரசின் விலையில்லா 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கூட் டுறவு இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வரவேற்றார். ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வள்ளலார் ஆர்.பி.ரமேஷ், கூட்டுறவு துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
காட்பாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
எழுதியவர்: mohan January 4, 2022, 3:44 pm




You must be logged in to post a comment.