வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு இதன் முதல்வராக டாக்டர் மா.அருளரசு பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தின் பொறியியல் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் வேலூரில் உள்ள அரசு தந்தைபெரியார் தொழிட்நுட்பகல்லூரியில் எம்.இ. (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்) தேர்வு எழுதிய என்.பிரபாவதி, பல்கலைக்கழகத்தில் 5 – வது இடத்தையும், மற்றொரு மாணவி ஏ.ஷாப்ரீன் (எம்சிஏ)11 -வது ரேங்க்கையும் பெற்று தேர்வில் வெற்றிபெற்றனர்.இருவரையும் கல்லூரி முதல்வர் மா.அருளரசு மற்றும் துறைசார்ந்த பேராசிரியர்கள் பாராட்டினர்.
வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதுநிலை பொறியியல் பிரிவில் 5 மற்றும் 11.வது இடத்தில் மாணவிகள் சாதனை
எழுதியவர்: mohan December 31, 2021, 7:56 pm




You must be logged in to post a comment.