18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கழுத்தை நெரித்து மனைவி கொலை. கணவன் போலீசில் சரண்

கழுத்தை நெரித்து மனைவி கொலை. கணவன் போலீசில் சரண்

எழுதியவர்: mohan December 31, 2021, 11:18 am

மதுரை எல்லீஸ் நகர் ஆர் சி சர்ச் தெருவில் வசித்து வரும்நாகவேல் 33 இவருக்கும் சுதா 36 என்பவருக்கும். நாகவேல் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. . நாகவேல் என்பவர் பெயிண்டிங் வேலை செய்துகொண்டு தனது மனைவி சுதா , அம்மா சாந்தி தம்பி தாஸ் ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். நேற்று இரவு நாகவேல் என்பவருக்கும் அவரது மனைவி சுதா என்பவருக்கும் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது தகராறு ஏற்பட்டு கோபம் அடைந்த நாகவேல் மனைவி சுதா கைகளால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் நாகவேல் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக நேரடியாக காவல் நிலையம் சென்று நாகவேல் சரணடைந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ் எஸ் காலனி போலீசார் சுதாவை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!