17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன்பாக நடைபெறும் பொங்கல் விழா.

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன்பாக நடைபெறும் பொங்கல் விழா.

எழுதியவர்: mohan December 23, 2021, 7:29 pm

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பாக வாடிவாசல் முன்புறமுள்ள அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோவில் இணைந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் உற்சவ பொங்கல் விழாவையொட்டி,பக்தர்கள் மாவிளக்கு எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, அக்னி சட்டி எடுத்தல் பால்குடம் எடுத்தல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில், முக்கியம் என்றால் அலங்காநல்லூர் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் முன்பாக, நடைபெறும் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும். இந்த பொங்கல் விழா அவ்வளவு சிறப்பு மிக்கது. இந்த விழாவை கிராம மக்கள், அருள்மிகு முனியாண்டி சுவாமி திருக்கோவில் அலங்காநல்லூர் மற்றும் விழாக்குழுவினர் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!