விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் பெண் பார்த்து நிச்சயம் செய்வதற்க்காக இராஜபாளையம் வழியாக செல்லும்பொழுது இராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் முதுகுடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சாலை ஓரத்தில் இருந்து நடுரோட்டுக்கு வாகனத்தை திரும்பிய போது அவர் மீது வாகனத்தை மோதாமல் இருப்பதற்காக வேனை ஓட்டிய டிரைவர் சேகர் வேனை அதிவேகமாக ஓட்டியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் வேன் உள்ளே இருந்த 4 பேர் படுகாயமடைந்து உள்ளனர்மேலும் 5 பேர் சிறு காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுபநிகழ்ச்சிகள் சென்ற வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் தப்பினர்போலிசார் விசாரணை.
எழுதியவர்: mohan October 28, 2021, 6:04 am




You must be logged in to post a comment.