18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே விவசாய சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து சாலையில் உருண்டு புரண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் அருகே விவசாய சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து சாலையில் உருண்டு புரண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan September 27, 2021, 4:13 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் அகில இந்திய விவசாயிகள்சங்கம்சார்பில்மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி,  ஒரு நாள் நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர் காமராஜ் தலைமை தாங்கினார் விவசாயிகளின் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் முபாரக் மாவட்ட குழு லட்சுமணன் தாலுகா செயலாளர் சிஎம் பிரகாஷ் திமுக நிர்வாகிகள் மதிமுக நிர்வாகிகள் தமிழக விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சி, தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் 2020 மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கி விடவும் , பொது சொத்துக்களை பங்கு விற்பனை குத்தகை என்ற பெயரில் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் விற்கக்கூடாது என்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து புற்றுநோயை கட்டுப்படுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை கொள்கையினை நிறுத்தவும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்இந்த போராட்டத்தில்,  விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!