வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக தேர்தல் ஆணையம் விஜயராஜை நியமனம் செய்து உள்ளது. காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜயராஜ் நேற்று 22-ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ரகு ஆகியோர் இருந்தனர்.
தேர்தல் பார்வையாளர் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு.
எழுதியவர்: mohan September 23, 2021, 11:17 am




You must be logged in to post a comment.