18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று தவறான வாக்குறுதி கொடுத்து மரணங்கள் தொடர திமுக தான் முழு காரணம்முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.

நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று தவறான வாக்குறுதி கொடுத்து மரணங்கள் தொடர திமுக தான் முழு காரணம்முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan September 16, 2021, 5:55 am

மதுரை வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறிய போது இதனை தெரிவித்தார்.முன்னதாகமதுரை புறநகர் மாவட்டம் சார்பாக வாடிப்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்தார். அவருடன் வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா , முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!