17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெங்களூரு கோரமங்களாவில் பயங்கர கார் விபத்துஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்ளிட்ட7 பேர் பலி.

பெங்களூரு கோரமங்களாவில் பயங்கர கார் விபத்துஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்ளிட்ட7 பேர் பலி.

எழுதியவர்: mohan August 31, 2021, 11:23 am

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். இவருடைய மகன் கருணாசாகர் (27). இவருக்கு விரைவில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் கருணாசாகர் மற்றும் ஆண் நண்பர்கள் 2 பேர் 4 பெண் நண்பர் என மொத்தம் 7 பேர் விலை உயர்ந்த ஆர்டிகாரில் நேற்று நள்ளிரவு பெங்களூ புறப்பட்டனர்.இன்று 31-ம் தேதி விடியற்காலை சுமார் 2 மணியளவில் பெங்களூரு கோரமங்களா ஆடுகுடி என்ற இடத்தில் சாலையில் வேகமாக சென்றபோது சாலையின் தடுப்பு சுவரில் மோதி சின்னாபின்னமானது.அதில் பயணம் செய்த ஓசூர் திமுக எம்எல்ஏ ஓய். பிரகாஷின் மகன் கருணா சாகர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆடுகுடிகாவல்துறையினர் வழக்குபதிவு செய்து பிரோதத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர்கள் அனைவரும் மது அருந்தி இருந்தார்களா? என்பது பிரோத பரிசோதனைஅறிக்கையில் தெரியவரும்விலை உயர்ந்த ஆர்டிகார் பெங்களூரில் வாகன பதிவு செய்யப்பட்டுள்ளது.பயணம் செய்தவர்கள் சீட் பெல்ட் அணியாமலும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!