17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மூன்றுநாள் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மூன்றுநாள் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 29, 2021, 5:26 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மூன்றுநாள் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது முதல் நாள் பயிலரங்கில் CPI மாநில செயலாளர் முத்தரசன். CPI கல்வி இலாக்கா கன்வீனர் சந்தானம் .CPI மாவட்ட செயலாளர் Ex MP லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் .பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பில்சிவகாசி பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு தொழிலாளர்களை ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஒன்றிய அரசு சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு கொண்டுவந்த சட்டத்தை திரும்ப பேர வேண்டும்ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி நவீனப்படுத்த வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துவோம்கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதட்டப் படுவது அங்கு நடந்த விசயத்தில் அவருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் தோன்றியுள்ளதுஎன செய்தியாளர் சந்திப்பில் கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!