17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்..

நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்..

எழுதியவர்: mohan August 10, 2021, 10:53 am

கூடங்குளம் ராதாபுரம் இருக்கன்துறை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளை மூட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் , விவசாய சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் , கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும் , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் , பெட்ரோல் , டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும் , கூடங்குளம் பகுதிகளில் இயங்கும் கல்குவரிகளை ,மூட வேண்டும் போன்ற 17 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!