18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை SDPI கட்சி இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு…

கீழக்கரை SDPI கட்சி இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு…

எழுதியவர்: ஆசிரியர் August 9, 2021, 2:55 pm

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி பல் வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் பணிகளை இன்னும் வீரியமாக செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு கீழக்கரை நகரை இரண்டாக கிழக்கு, மேற்கு என்று மாவட்டத்தின் பரிந்துரையால் பிரிக்கப்பட்டுள்ளது

மேற்கு கிளையின் தலைவராக முன்னாள் தலைவர் ஹமீது பைசல்,  செயலாளராக கீழை அஷ்ரப் என்கிற செய்யது அஸ்ஹாப்,  பொருளாளராக அசார்தீன்,  துணை தலைவராக முஹம்மது ஜலீல் மற்றும் செய்யது அபுதாஹிர் இணைச் செயலாளராக முஹம்மது சலீம் மற்றும் யாசின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்.

இதன் அடிப்படையில் கிழக்கு நகர் தலைவராக நூருல் ஜமான்,  செயலாளர் பகுருதீன்,  பொருளாளர் தாஜூல் அமீன், துணைத் தலைவர்களாக ஹாஜா அலாவுதீன், அகமது ஷிஃபாய்,  இணைச் செயலாளர்களாக சாதிக் அலி, ரிஹான் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக முகைதீன் அடிமை, முஹம்மது பாக்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்.

கிழக்கு மற்றும் மேற்கு கிளைகளின் நிர்வாகிகள் விபரம் கீழே:-
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!