17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீரளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

வீரளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

எழுதியவர்: mohan July 19, 2021, 4:01 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் ஊராட்சி மன்ற தலைவர் சான்பாஷா இம்முகாம் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருந்தாளர் சரவணன் செவிலியர்கள் கிரிஜா, சென்னம்மாள் பங்கேற்று பொதுமக்களை பரிசோதனை செய்தனார் பின்னர் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி கூறுகையில் கர்பினி தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பின்னர் 100 மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தார்கள் உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா மகேந்திரன் ஊராட்சி செயலாளர் சுப்ரமணி மற்றும் வீரளூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!