மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் கொரோனா முதல் அலை பரவலின் போது மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக
ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தற்போது தேர்தலுக்குப் பின்னர் திமுக கட்சியினர் நடத்தும் ஆலைக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காகவே மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியினர் முற்றிலுமாக தனது கண்டனத்தை தெரிவிப்பதுடன், மதுக்கடைகளை மூடாமல் இருக்கும்பட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மதுகடைகளை நிரந்தரமாக மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan June 19, 2021, 6:47 am




You must be logged in to post a comment.