திருவண்ணாமலை அடுத்த மேல் பெண்ணாத்தூர் பகுதி கூட்டுறவு நியாய விலைக் கடையில் கரோனா நிவாரண உதவித்தொகை, 14 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திமுக மாவட்ட கழக செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ.வேலு அறிவுறுத்தலின்படி , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி ஆலோசனையின்பேரில், மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் விஜய்கலந்து கொண்டு 2-வது தவணையாக கரோனா நிவாரணம் தலா ரூ.2 ஆயிரம், 14 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை1100அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினார்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் கூட்டுறவு சங்க துணை தலைவர் சுப்பிரமணி மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மேல் பெண்ணாத்தூர் கிராமத்தில்கரோனா நிவாரண உதவித்தொகை, ஊராட்சி மன்ற தலைவர் விஜய் வழங்கினார்
எழுதியவர்: mohan June 16, 2021, 7:03 pm




You must be logged in to post a comment.