18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்கில் இந்தியன் தமிழ்நாடு திறன் மேம்மாட்டு கல்வி மையங்களின் கூட்டமைப்பு சார்பில்முன் கள பணியாளர்களா பணியாற்ற அரசுக்கு கோரிக்கை.

ஸ்கில் இந்தியன் தமிழ்நாடு திறன் மேம்மாட்டு கல்வி மையங்களின் கூட்டமைப்பு சார்பில்முன் கள பணியாளர்களா பணியாற்ற அரசுக்கு கோரிக்கை.

எழுதியவர்: mohan May 31, 2021, 4:52 pm

ஸ்கில் இந்தியன் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள்மதுரை திருநகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்,தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்று 2வது அலையின் அவசரநிலை காலத்தில்மருத்துவம் சார்ந்த பயிற்சி முடித்தஸ்கில் இந்தியன் மாணவிகளை முன்கள பணியாளர்களாக பயன்படுத்தி கொள்ளதமிழக அரசுக்கு உரிய முறையில் கோரிக்கை மனுவினை அனுப்பியுள்ளோம்.இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பின் வாயிலாகவும்தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்ஸ்கில் இந்தியன் என்பது தமிழகம் முழுவதும் உரிய அனுமதி பெற்று மருத்துவம் சார்ந்தஒரு வருட இரண்டு வருடபட்டய பயிற்சிகளை வழங்கி வரும் ஐநூறுக்கு மேற்பட்ட பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு ஆகும்,தமிழகம் முழுவதும் ஸ்கில் இந்தியன் மூலமாக பயிற்சி பெற்ற மாணவிகள்தற்போது பயிற்சியில் உள்ள மாணவிகள்என்று ஆயிரக்கணக்கான மாணவிகள் இருக்கின்றனர்.இவர்கள் அனைவரும் மருத்துவம் சார்ந்த அறிவினையும் மேலும் மருத்துவமனைகளில் நேரடி பயிற்சி பெற்றும், பணிபுரிந்தும் மருத்துவம் சார்ந்தநல்லமுன் அனுபவம் உள்ளவர்களாகவும் இருந்து வருகின்றனர்தற்போது கொரோனா பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலையில் தமிழக அரசும்தமிழக அரசின் சுகாதார துறையும் தமிழக முதல்வர் அவர்களது நேரடி வழிகாட்டுதல் படிமிகச்சிறப்பாக நோய்தடுப்பு முறைகளை செயல்படுத்தி வருகின்றனர்,இருப்பினும் பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் சிகிச்சை பராமரிப்பு பணிகளில் மருத்துவம் சார்ந்த முன்கள பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்ய தமிழக அரசு பலவழிகளில் நடவடிக்கை எடுத்துவருவதை அறிவோம்.அதன்படி ஸ்கில் இந்தியன் மூலமாக முறையே மருத்துவ பயிற்சியினை பெற்றுநல்ல முன் அனுபவம் உள்ள ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்கள பணியாளர்களாக தன்னார்வலராக தமிழக அரசின் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதார துறையோடு இணைந்து பணிபுரிந்திட சேவை செய்திட விரும்புகின்றனர்.தன்னார்வமான இந்த மருத்துவம் சார்ந்த பயிற்சி முடித்த மாணவிகளின் விருப்பத்தினையும்சுழல் அறிந்து அவர்களுடைய விருப்பத்தினை கோரிக்கையாக முன் வைத்திருக்கும் எங்கள் வேண்டுகோளையும் தமிழக அரசு பரீசிலனை செய்து நல்லதொரு அறிவிப்பினை அறிவித்திட வேண்டும் என்று அவர்தமதுஅறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்பேட்டி.ஈஸ்வரன்ஒருங்கிணைப்பாளர்ஸ்கில் இந்தியன்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!